பாஜக கூட்டணி முறிவில் அதிமுக உறுதி: எடப்பாடி பழனிசாமி
- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்எல்-க்கள் சந்தித்தது தொகுதி பிரச்சனைக்காகவே.
- முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் புதிய திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஏற்கனவே அறிவித்ததுதான்.
* தொண்டர்களின் உணர்வுக்கு இணங்கவே பாஜகவுடன் கூட்டணி முறிவு என முடிவு எடுக்கப்பட்டது.
* பாஜகவுடன் கூட்டணி இல்லையென எடுக்கப்பட்ட முடிவில் அதிமுக உறுதியாக உள்ளது.
* பல தொகுதிகளில் அதிமுகவினர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்தனர்.
* 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம்எல்ஏ-க்கள் தொகுதி பிரச்சனைக்காகவே சந்தித்தனர் .
* முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.
* காவிரி நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
* காவிரியில் உரிய நீரை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை.
* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.