தமிழ்நாடு

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2022-06-21 03:43 GMT   |   Update On 2022-06-21 03:43 GMT
  • கொரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
  • எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பின் எண்ணிக்கையும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் எம்.பி கனிமொழி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News