தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை குழு நாளை முதல் சுற்றுப்பயணம்

Published On 2024-02-04 04:00 GMT   |   Update On 2024-02-04 05:53 GMT
  • பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.
  • திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சென்னை :

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக ஈடுபட்டு வருகிறது.


இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது? பாராளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டிய பிரச்சனைகள் என்னென்ன? மக்களின் கோரிக்கைகள் என்னென்ன? என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்க திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு நாளை தூத்துக்குடியில் பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கின்றனர்.

Tags:    

Similar News