தமிழ்நாடு

சென்னையில் குஷ்புவை கண்டித்து தி.மு.க. மகளிரணி போராட்டம்

Published On 2024-03-13 09:15 GMT   |   Update On 2024-03-13 09:15 GMT
  • குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
  • பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பா.ஜனதா நிர்வாகி நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தி.மு.க. மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒட்டு மொத்த சென்னை மாவட்ட மகளிர் அணியினர் திரளாக பங்கேற்கும் இந்த போராட்டத்தில் குஷ்பு கொடும் பாவியையும் கொளுத்த இருக்கிறார்கள்.

மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணியினர், மகளிரணி அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News