தமிழ்நாடு

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்- கோவை மாவட்ட ஆட்சியர்

Published On 2022-06-25 13:26 GMT   |   Update On 2022-06-25 13:26 GMT
  • கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களுக்கு எச்சரிக்கை.
  • கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு.

கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்கவும் அம்மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News