தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

Published On 2022-12-15 13:57 IST   |   Update On 2022-12-15 13:57:00 IST
  • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேமூட்டத்துடன் காணப்படும்.
  • வங்கக்கடல், அரபிக்கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

தமிழகம், புதுச்சேரியில் வரும் 19ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வங்கக்கடல், அரபிக்கடலில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags:    

Similar News