தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு அருகே 2 மகன்களுடன் தம்பதி மாயம்

Published On 2023-06-09 13:58 IST   |   Update On 2023-06-09 13:58:00 IST
  • நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம், ராதா நகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது49). இவரது மனைவி வசுமதி (35) இவர்களது மகன்கள் அஜித்குமார் (13), மித்தேஷ் (10). நேற்று முன்தினம் முதல் குணசேகரன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்று தெரியவில்லை.

அவர்களது வீடு திறந்து கிடக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசுமதியின் அண்ணன் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்துடன் மாயமான தம்பதியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News