தமிழ்நாடு செய்திகள்
திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து
- பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பெங்களூரில் இருந்து வந்த அரசு சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.