தமிழ்நாடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

Published On 2022-11-15 09:11 GMT   |   Update On 2022-11-15 09:11 GMT
  • தொகுதி பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரிடம் பேசியதாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
  • மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

பா.ஜனதா எம்.எல். ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், சரஸ்வதி, காந்தி ஆகியோர் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து தொகுதி பிரச்சினையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

அதன் பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

"மண்டைக்காடு கலவரம் குறித்து வேணுகோபால் கமிஷன் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசினோம். வேணு கோபால் கமிஷன் அறிக்கையை அரசாணையாக கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறும் போது, "தொகுதி பிரச்சினை குறித்து பேசினோம்" என்றார்.

Tags:    

Similar News