தமிழ்நாடு

நகை மோசடி வழக்கில் கைதானவர்: ஜாமீனில் வந்தவரை கட்டிப்போட்டு ரூ.8 லட்சம் கொள்ளை

Published On 2023-07-11 06:18 GMT   |   Update On 2023-07-11 06:18 GMT
  • 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

புதியம்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள தெற்கு திட்டங்குளம் முத்துநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 48).

இந்நிலையில் முத்துராமலிங்கம் ரூ. 8 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் என்ற கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து போகவே குறுக்குச்சாலையில் உள்ள தனது நண்பர் ஜேக்கப் என்பவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஜேக்கப் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது முத்து ராமலிங்கத்தின் மோட்டார் சைக்கிள் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து ஜேக்கப் ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் கழுத்து மற்றும் கை, கால்களில் துணியால் கட்டப்பட்ட நிலையில் முத்துராமலிங்கம் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், 3 பேர் கொண்ட கும்பல் முத்துராமலிங்கத்தை கட்டிப்போட்டு விட்டு ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்? எந்த ஊரை சோந்தவர்கள்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்கம் மீது கோவில்பட்டி, கயத்தார், ஓட்டப்பிடாரம், நாரைகினறு ஆகிய போலீஸ் நிலையங்களில் நகை மோசடி செய்ததாக வழக்கு உள்ளது. இவர் குண்டாசில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார். தன்னிடம் நகைகளை கொடுத்த நபர்களுக்கு பணத்தை திருப்பி தருவதற்காக ரூ. 8 லட்சத்தை எடுத்து கொண்டு சென்ற போது தான் கொள்ளை சம்பவம் நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News