தமிழ்நாடு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் திறப்பு

Published On 2022-11-12 15:47 IST   |   Update On 2022-11-12 16:02:00 IST
  • கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
  • ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நிரம்பி வருகிறது.

இதனால், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு 500 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரியில் இருந்த உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் கூடுதலாக உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் வைத்து கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News