திருட்டுத்தனமாக மது விற்ற 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது
- செட்டிபுண்ணியம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த கம்சலா என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- திருட்டுத்தனமாக மதுவிற்ற தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அன்றைய தினங்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மது கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை வெளியிட்டு இருந்தார். மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கையை மீறி நேற்று காட்டாங்கொளத்தூர் திருப்பாணாழ்வார் தெருவில் காந்தி ஜெயந்தியன்று திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த வேதம் (வயது 50), வள்ளி (56), பானுமதி (50), சித்ரா (40), சித்தா (40) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 80 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் செட்டிபுண்ணியம் அருகே திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்த கம்சலா (56), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 75 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் பின்புறம் திருட்டுத்தனமாக மதுவிற்ற தேவக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (29) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.