தமிழ்நாடு செய்திகள்
சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பதே தெரியாது - சீமான்
- சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி.
- சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தியதால் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை.
* சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி.
* சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது. வழக்கு மொழியாக தான் பேசினேன்.
* திருமூலர் வரை சண்டாளர் வார்த்தை பயன்படுத்தி உள்ளார். கந்த சஷ்டி கவசத்தில் அந்த வார்த்தை உள்ளது.
* சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தியதால் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா? என்று கூறினார்.