தமிழ்நாடு
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
- 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
- 1 முதல் 5-ம் வகுபு மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
சென்னை:
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ம் தேதி தொடங்கியது. 23-ம் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது.
அரையாண்டு தேர்வு முடிந்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு இன்று
பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.