தமிழ்நாடு

அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி வாலிபர்களிடம் ரூ.15 லட்சம் மோசடி

Published On 2023-09-17 07:55 GMT   |   Update On 2023-09-17 07:55 GMT
  • தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
  • தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை புதுகாமன் பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மதுரை வருமான வரித்துறை அலுவலக பகுதியில் வசிக்கும் சண்முகத்துரை (58), அவரது மகள் அர்ச்சனா, தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த குணசேகரன் ஆகியோர் ஒரு நண்பர் மூலமாக அறிமுகமாகினர்.

இவர்கள் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அரசு உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனால் தங்களுக்கோ, தங்களுக்கு வேண்டிய நபருக்கோ அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

அவர்களின் தகுதிக்கேற்ப, வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என கூறியுள்ளனர். இவர்கள் பேச்சை நம்பிய செல்வராஜ், நண்பர் ராஜேந்திரன், உறவினர் ராஜேஷ் ஆகியோர் ரேஷன் கடையில் வேலை வாங்கி தரும்படி கூறி உள்ளனர். இதற்காக 2020-ல் பல்வேறு தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து மதுரை மாநகர போலீஸ் துணை கமிஷனரிடம் செல்வராஜ் புகார் செய்தார். அவருடைய உத்தரவின் பேரில் தல்லாகுளம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சண்முகத்துரை, அவருடைய மகள் அர்ச்சனா, குணசேகரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து சண்முகத்துரையை கைது செய்தனர்.

Tags:    

Similar News