தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

Published On 2023-09-16 13:22 GMT   |   Update On 2023-09-16 13:22 GMT
  • போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் ரவுடி விஷ்வா.
  • ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், சுங்கவார்சத்திரத்தில் ரவுடி மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.

ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News