தமிழ்நாடு செய்திகள்

ஆலந்தூரில் கருணாநிதிக்கு சிலை- மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-10-12 16:22 IST   |   Update On 2022-10-12 16:22:00 IST
  • 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன.
  • ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலந்தூர்:

ஆலந்தூர் மண்டல குழு கூட்டம் மண்டலக்குழு தலைவர் என்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் பேசும்போது, 165-வது வார்டில் புதிதாக சேர்க்கப்பட்ட 7 தெருக்கள் இன்னும் என்னுடைய வார்டில் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து நடந்து முடிந்த 6 மண்டல கூட்டத்திலும் பேசிவிட்டேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

அ.தி.மு.க. கவுன்சிலர் உஷா கூறும்போது, 157-வது வார்டில் குடிநீர் வாரியம் சார்பில் நடந்த பணியால் ஆங்காங்கே கல், மண் போன்ற கழிவுகள் அகற்றப்படாமல் சாலை யிலே உள்ளன. இதனால் ஆய்வுக்கு செல்லும்போது 2 முறை வழுக்கி விழுந்து விட்டேன் என்றார்.

இதுகுறித்து கேள்வி நேரத்தின் போது மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தான் இதற்கு காரணம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு கூறியதால் பரபரப்பாக இருந்தது.

இதைத்தொடர்ந்து ஆலந்தூர் பகுதி, நேரு நெடுஞ்சாலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மொத்தம் 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News