தமிழ்நாடு

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்த காட்சி

பிரதமர் வருகை எதிரொலி: மீனாட்சி அம்மன் கோவில், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனை

Published On 2024-01-18 09:12 GMT   |   Update On 2024-01-18 09:12 GMT
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை:

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷே விழா நடைபெறுவதை ஒட்டியும், நாளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி 3 நாள் பயணமாக வருவதை முன்னிட்டும், மேலும் ஜனவரி 26-ந்தேதி இந்திய குடியரசு தினத்தை யொட்டியும் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்

அந்தவகையில், மதுரையில் வைகை ஆற்றுக்கு வடக்கேயும், தெற்கேயும் இரு பிரிவுகளாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம், தல்லாகுளம் பெருமாள் கோவில், கோரிப்பாளையம், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதேபோல் பெரியார் பேருந்து நிலையம், மதுரை ஜங்ஷன் ரெயில் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் ஆறு பேர் கொண்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட அதிநவீன கருவிகளுடன் இந்த வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தீவிர சோதனை இன்று முதல் ஜனவரி 26-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News