தமிழ்நாடு

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

Published On 2022-06-15 14:53 GMT   |   Update On 2022-06-15 14:53 GMT
  • நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்
  • சில்லறை விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்க முடியாத சூழல்

சென்னை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கடனுக்கு பெட்ரோல், டீசல் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.

பணம் கொடுத்தால் மட்டுமே விற்பனை நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சில்லறை விற்பனையாளர்கள் முன்பணம் செலுத்தி பெட்ரோல், டீசல் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் பெட்ரோல் பங்குகளில் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

Similar News