தமிழ்நாடு செய்திகள்

அடுத்தடுத்து ஆலோசனைக்கூட்டம்... வேகமெடுக்கும் தி.மு.க. தேர்தல் பணி

Published On 2024-01-23 09:08 IST   |   Update On 2024-01-23 09:08:00 IST
  • சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.
  • தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு கனிமொழி எம்.பி. தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழுவில் கனிமொழி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்) (தலைமை), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் பணி வேகமெடுத்துள்ளது.

Tags:    

Similar News