தமிழ்நாடு

1½ வயது குழந்தை கொடூர கொலை: தந்தை-தாயிடம் போலீசார் விசாரணை

Published On 2023-11-17 06:56 GMT   |   Update On 2023-11-17 06:56 GMT
  • டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
  • போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில்:

நித்திரவிளை அருகே காஞ்சாம்புரத்தை சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது மனைவி பிரபுஷா. இவர்களது மகன் அரிஸ்டோ பியூலாஸ் (வயது 1½).

இவர்கள் தற்பொழுது அஞ்சுகிராமம் அருகே வசித்து வருகிறார்கள். சதாம் உசேன் அந்த பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அரிஸ்டோ பியூலாஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். டாக்டர்கள் அரிஸ்டோ பியூலாசை பரிசோதித்தபோது உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அரிஸ்டோ பியூலாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சதாம் உசேன், பிரபுஷாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இருவரையும் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரிஸ்டோ பியூலாஸ் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது உடலில் காயங்கள் உள்ளதையடுத்து அவரை கொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை கொன்றது யார்? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 1½ வயது குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News