தமிழ்நாடு

கட்டணமின்றி பள்ளி சான்றிதழ் நகல்கள் பெற நடவடிக்கை- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Published On 2023-12-23 14:05 GMT   |   Update On 2023-12-23 15:49 GMT
  • கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு.
  • உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் சான்றிதழ் நகல் கட்டணமின்றி வழங்கப்படும்.

சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தாங்கள் படித்து வரும் பள்ளிகளில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


Tags:    

Similar News