தமிழ்நாடு

யாரும் அழைக்க வேண்டாம்: இயக்குனர் அமீர்

Published On 2024-04-03 06:08 GMT   |   Update On 2024-04-03 06:08 GMT
  • போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை முடிந்து இயக்குனர் அமீர் சென்னை திரும்பியுள்ளார்
  • அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள்.

போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை முடிந்து இயக்குனர் அமீர் சென்னை திரும்பியுள்ளார். இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், டெல்லியில் நடந்த விசாரணை தொடர்பான தகவல்களை கேட்பதற்காக தொடர்பு கொண்டனர். இதையடுத்து தனது செல்போன் ஸ்டேட்டஸ் மூலமாக அமீர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News