தமிழ்நாடு செய்திகள்

நீட் தேர்வு குளறுபடி- தமிழிசை விளக்கம்

Published On 2024-06-19 14:50 IST   |   Update On 2024-06-19 14:50:00 IST
  • நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • நீட் தேர்வில் எத்தகைய குளறுபடி ஏற்பட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

சென்னை:

தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் எத்தகைய குளறுபடி ஏற்பட்டிருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

நிர்வாக ரீதியான குளறுபடிகள் சரி செய்யப்படும் என்று கூறிய பின்னும் அரசியல் கட்சிகள் பிரச்சனையாக்குவதாகவும், நீட் தேர்வே தேவையில்லை என்ற பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொள்வதாகவும் அவர் குற்றச்சாட்டி உள்ளார்.

Tags:    

Similar News