தமிழ்நாடு

இன்று முதல் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

Published On 2024-05-24 07:46 GMT   |   Update On 2024-05-24 07:46 GMT
  • பட்டாசு ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
  • மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

சிவகாசி:

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர், வெம் பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலைகளில் நேரடி யாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பட்டாசு தொழிற்சாலைகள் மத்திய அரசு வழங்கக்கூடிய நாக்பூர் லைசன்ஸ் மற்றும் சென்னை லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உரி மம் பெற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் பட்டாசு விபத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பேரியம் நைட்ரேட் என்ற பச்சை உப்பு மற்றும் தொடர் வெடிக்கான தடையை அறிவித்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் பேன்சி ரக தொடர் வெடிக்கான சாட் வெடிகளையும் அதில் பயன்படுத்தப்படும் பச்சை உப்பையும் கண்டுகொள்ளாமல்விட்டது.

மேலும் தொடர் வெடியின் வகைகளில் ஒன்றான சரவெடி தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே மூடி வருவதால் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டாப்மா) சார்பில் இன்று முதல் (24-ந்தேதி) மறு அறிவிப்பு வரும் வரை காலவறையற்ற விடுமுறை அளிப்பதாக அனைத்து சங்க உறுப்பினர்களாலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இன்று காலை பட்டாசு உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News