தமிழ்நாடு

போலியோ இல்லாச் சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Published On 2024-03-03 02:06 GMT   |   Update On 2024-03-03 02:06 GMT
  • தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
  • இந்த மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

சென்னை:

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43,051 மையங்களில் நடைபெறுகிறது.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இதில் சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில், போலியோ இல்லாத சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முக ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில், போலியோ இல்லாச் சமுதாயம் தொடர சொட்டு மருந்து வழங்குங்கள். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து வழங்க வேண்டும். நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News