4 மாவட்டங்களில் 325 சுகாதார நிலையங்கள் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை.
- நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
இந்நிலையில் நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* மழை வெள்ளத்தால் மருத்துவமனைகளுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
* 4 மாவட்டங்களில் 64 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 261 துணை சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
* நெல்லையில் 13 சுகாதார நிலையங்கள், 13 துணை சுகாதார நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* சுகாதார நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இழப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
* அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.