தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 101.89 அடியாக சரிந்தது
- ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 4-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது.
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 4-வது நாளாக நீர்வரத்து 500 கன அடியாக நீடிக்கிறது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 495 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 486 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 101.89 அடியாக குறைந்தது.