தமிழ்நாடு

மஞ்சுவிரட்டு - காளை குத்தி இளைஞர் உயிரிழப்பு

Published On 2024-01-16 11:27 GMT   |   Update On 2024-01-16 11:29 GMT
  • பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறும்.
  • அவனியாபுரம் ஜல்லிகட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேடு ஜல்லி கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

மதுரை எலியார்பத்தியில் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில், காளை குத்தி ஒருவர் உயிரிழந்துள்ளார். எலியார்பத்தி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அங்கு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் இருந்து ஓடிவந்த காளை, ரமேஷ் என்ற இளைஞரின் இடது மார்பில் முட்டியது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த ரமேஷ்-க்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், ஒரு வயதில் பெண்குழந்தை உள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News