இந்தியா

ஜிம்மில் அதிர்ச்சி.. திரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

Published On 2023-09-16 15:44 GMT   |   Update On 2023-09-16 15:47 GMT
  • ஜிம்மில் உடல் பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர்.
  • சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி "ஃபிட்னஸ் ஃப்ரீக்"குகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரஸ்வதி விஹாரில் இயங்கி வரும் ஜிம் ஒன்றில் ஒருவர் திரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜிம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின்படி,காஜியாபாத்தை சேர்ந்த சித்தார்த் என்ற நபர் ஜிம்மில் உடற் பயிற்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.திரெட்மில்லில் சித்தார்த் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நின்று மெதுவாக சுயநினைவை இழந்து திரெட்மில் அருகே சரிந்து விழுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிம்மில் உடல் பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி "ஃபிட்னஸ் ஃப்ரீக்"குகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

Similar News