தமிழ்நாடு
தாமரை சின்னத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
- மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்.
- வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.
சென்னை:
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி தலைவர் ரமேஷ் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பா.ஜ.க.வுக்கு தேசிய மலரான தாமரை சின்னம் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. வக்கீல்கள் வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இன்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.