தமிழ்நாடு

கொடநாடு வழக்கு: சயானுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் மீண்டும் சம்மன்

Published On 2024-01-24 08:13 GMT   |   Update On 2024-01-24 08:13 GMT
  • சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
  • சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

கோவை:

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் கேரளாவில் ஒரு வழக்கில் ஆஜராக சென்றதால் அன்றைய தினம் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் சயானிடம் விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதில் வருகிற பிப்ரவரி 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சயான் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராவார் என தெரிகிறது. அவரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Tags:    

Similar News