தமிழ்நாடு
ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயக்குமார்
- அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
- நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று விருப்ப மனு வழங்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் அதிமுக முன்னாள் நிர்வாகி சர்ச்சை பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
* ஏ.வி.ராஜு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நடிகைகள், பெண்மையை இழிவுப்படுத்தி பேசக்கூடாது.
* ஏ.வி.ராஜுவின் பேச்சை நிச்சயமாக ஏற்க முடியாது என்று கூறினார்.