தமிழ்நாடு

மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து ஜவகர்நேசன் விலகல்... பரபரப்பு அறிக்கை

Published On 2023-05-10 14:37 GMT   |   Update On 2023-05-10 14:37 GMT
  • ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டது.
  • மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாக புகார்

சென்னை:

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், தமிழகத்திற்கு என்று தனியாக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஜவகர்நேசன் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கை குழுவில் இருந்து விலகுவதாக ஜவகர்நேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில் பல்வேறு தலையீடுகள் இருந்ததாகவும், இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாததால் கனத்த இதயத்துடன் குழுவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News