தமிழ்நாடு

சென்னை அழைத்து வரப்படும் ஜாபர் சாதிக்

Published On 2024-03-09 15:25 GMT   |   Update On 2024-03-09 15:25 GMT
  • ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்படுகிறார்.

ஜாபர் சாதிக் கைது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 17ம் தேதி முதல் தலைமறைவான ஜாபர் சாதிக், 5க்கும் மேற்பட்ட செல்போன்களை மாற்றியதாக தகவல் வௌியாகியுள்ளது.

ஜாபர் சாதிக், 2019ம் ஆண்டு முதல் போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, புரசைவாக்கத்தில் ஓட்டல், 'மங்கை' படம் தயாரித்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடத்தலில் வந்த பணத்தின் மூலமாக பயன் அடைந்தவர்கள் பட்டியலை தனித் தனியாக விசாரணை செய்யவும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News