தமிழ்நாடு

மனித கழிவுகள் கிடந்த அரசு தொடக்கப்பள்ளி


வாணியம்பாடி அருகே அரசு பள்ளி வளாகத்தில் மனித கழிவுகள்

Published On 2023-11-20 06:34 GMT   |   Update On 2023-11-20 06:34 GMT
  • பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது.
  • காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது.

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கிரி சமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 168 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணம்மாள் என்பவர் உள்ளார். இந்த பள்ளியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் அடிக்கடி வந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தற்போது கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று காலை வழக்கம்போல் பள்ளியை ஆசிரியர்கள் திறந்தனர்.

பள்ளி வளாகத்தில் மதுபாட்டில்கள் மற்றும் மனித கழிவுகள் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பள்ளியில் தூய்மை பணியாளர் இல்லை. தற்காலிகமாக பணியாளர்களை அழைத்து தூய்மை பணி செய்து வருகிறோம். பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தரகோரி பலமுறை மனு அளித்துள்ளோம்.

இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் காலாண்டு தேர்வு விடுமுறையின் போதும் பள்ளி வளாகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News