தமிழ்நாடு
மாமல்லபுரத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது
- மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் பிடிபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகளான செங்கல்பட்டு திம்மராஜகுளம் பகுதியை சேர்ந்த அருள், மாமல்லபுரம் அடுத்த மணமையை சேர்ந்த குருமூர்த்தி என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து 2 கிலோ கஞ்சா, ரூ.13 ஆயிரம் ரொக்கம், 2 மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.