தமிழ்நாடு

60 ஆண்டு காலத்துக்கு திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் பயமில்லை - முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Published On 2022-09-15 14:49 GMT   |   Update On 2022-09-15 14:54 GMT
  • மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்வதாக துரைமுருகன் பேச்சு
  • திராவிட ஆட்சியின் தத்துவத்தை முதல்வர் அறிமுகம் செய்திருக்கிறார்.

விருதுநகர்:

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:-

ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகிறார். அதனால்தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது.

தளபதி அவர்கள், கட்சி தலைவராகி முதலமைச்சர் ஆனவுடன், இன்றும் அதிகமாக அவரது கவனம் வடநாட்டில் செலுத்தப்படாத காலத்திலேயே இன்றைக்கு இருக்கும் முதல் அமைச்சர்களிலேயே முதல் அமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி என்று அகில இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது.

நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், பிரதமர் மோடி அவர்கள், தளபதியை பார்க்கும்போதெல்லாம் சொல்வார், 'கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின், உன்னை எனக்கு பிடித்திருக்கிறது. நீ வந்தால் என் வீட்டில் தங்கு. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்' என்று சொல்லும் அளவிற்கு இவருடைய கண்ணியம், பண்பாடு தலைதூக்கி நிற்கிறது.

யாராலும் இந்த ஆட்சியை பற்றி குறை கூற முடியவில்லை. மக்களுக்கான திட்டங்கள் உடனடியாக மக்களை சென்று சேர்கின்றன. நமது முதலமைச்சர் அவர்கள் ஆட்சியையும் செம்மையாக நடத்துகிறார், கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

இனிமேல் இது திராவிட மாடல் ஆட்சி என்று கூறியிருக்கிறார். இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். எனவே, இன்னும் 60 ஆண்டு காலத்துக்கு இந்த இயக்கத்துக்கு பயமில்லை, ஆட்சிக்கும் பயமில்லை என்ற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கிறார். 

இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

Tags:    

Similar News