தமிழ்நாடு

திருப்பூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.3¾ கோடி பணம்-பொருட்கள் பறிமுதல்

Published On 2024-04-16 05:37 GMT   |   Update On 2024-04-16 05:37 GMT
  • திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நடைமுறை கடந்த மாதம் 17-ந் தேதி முதல் அமலானது. தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள், மதுபானங்கள் கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி முதல் இன்று வரை ரூ.3 கோடியே 27 லட்சத்து 71 ஆயிரத்து 428 பணத்தை பறக்கும்படை, நிலைக்கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் தங்கம், வெள்ளி பொருட்கள் ரூ.18 லட்சத்து 90 ஆயிரத்து 471 மதிப்பிலான பொருட்களையும், மது மற்றும் போதைப்பொருட்கள் ரூ.7 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும், டி.வி., பாத்திரங்கள், சால்வை, அரிசி, வேட்டி, சேலைகள், டி-சர்ட்டுகள், பனியன்கள் உள்பட ரூ.24 லட்சத்து 42 ஆயிரத்து 170 மதிப்பிலும் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.3 கோடியே 78 லட்சத்து 64 ஆயிரத்து 71 மதிப்பிலான பணம்-பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிகபட்சமாக ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 918 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.1 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 891 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 178 பணம் பறிமுதல் வழக்குகள் தொடுக்கப்பட்டதில், 134 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பணம் விடுவிக்கப்பட்டுள்ளன. 47 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேர்தல் செலவின பிரிவு பொறுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News