தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூரில் குடியிருப்புகள் மற்றும் குடோன்கள் நீரில் மூழ்கி உள்ள காட்சி.

தூத்துக்குடிக்கு 3வது நாளாக விமான சேவை ரத்து

Published On 2023-12-19 03:29 GMT   |   Update On 2023-12-19 03:29 GMT
  • சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பி வரும்.
  • கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் 2-வது நாளாக நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

தூத்துக்குடி:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்றுவிட்டு திரும்பி வரும். ஆனால் தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையால் நேற்று முன்தினம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததால் 2-வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று 3வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News