தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அ.தி.மு.க.வே காரணம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2024-04-13 16:26 GMT   |   Update On 2024-04-13 16:26 GMT
  • அ.தி.முக.வை யாரும் மிரட்ட முடியாது, எந்த பூச்சாண்டிக்கும் அ.தி.மு.க. பயப்படாது.
  • அ.தி.மு.க.வை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு கரைந்து போய் விடுவார்கள் என்றார்.

அரியலூர்:

அரியலூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:

இந்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க., காணாமல் போகும் என சிலர் பேசுகின்றனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை பார்க்கவே இல்லை. தேர்தல் காரணமாக தற்போதுதான் தேநீர் கடைக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளார்.

சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி மற்றும் நடைபயணம் செய்வதை மட்டுமே முதல்வர் செய்கிறார். தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.

மகளிர் உரிமைத்தொகை கிடைக்க அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.

மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர் என ஸ்டாலின் கூறுகிறார். ஆம் அவர்கள் பக்கம் இருக்கின்றனர். ஆனால், எங்களுக்கு ஓட்டுப் போடுவார்கள்.

எப்போதும் குடும்பத்தைப் பற்றி சிந்திக்கும் முதல்வராக ஸ்டாலின் உள்ளார். தமக்கு மக்கள் செல்வாக்கு இல்லாததால் இந்தியா கூட்டணியை ஏற்படுத்தி வாக்கு கேட்கிறார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News