தமிழ்நாடு
தேர்தல் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது: எடப்பாடி பழனிசாமி
- ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
- அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.
* ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
* கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பது தான் நோக்கம்.
* தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.
* அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.
* தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.
* அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.
* அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.