தமிழ்நாடு

தேர்தல் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது: எடப்பாடி பழனிசாமி

Published On 2024-02-21 06:23 GMT   |   Update On 2024-02-21 06:23 GMT
  • ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.
  • அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

மதுரை:

மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது.

* ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் எந்த கட்சிக்கும் செல்லலாம்.

* கட்சி ஒரு குடும்பத்திற்கு போகக்கூடாது என்பது தான் நோக்கம்.

* தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம்.

* அதிமுக சுயமாக முடிவு எடுத்து செயல்பட தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை.

* தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் அப்படியே நடக்காது.

* அதிமுக தலைமையிலான கூட்டணி பிரமாண்டமாக இருக்கும்.

* அதிமுக சிறப்பான கூட்டணி அமைக்கும் என்று கூறினார்.

Tags:    

Similar News