அ.தி.மு.க.வில் 6 அணிகளுக்கு மாநில நிர்வாகிகள் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- வர்த்தக அணி இணை செயலாளர்-ராஜன், துணை செயலாளர்களாக மான்மல், மாரியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- சேலம், திருப்பூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை:
அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் பாபு, மாணவர் அணி துணை செயலாளர் மான்மல், திருப்பத்தூர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் டில்லிபாபு, திருவள்ளூர் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் சல்மான் ஜாவித், வேலூர் மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் திருமால் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாபு, புரட்சித்தலைவி பேரவை துணை செயலாளர்களாக டில்லிபாபு, சிவன்பாபு, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர்-திருமால், மாணவர் அணி துணை செயலாளர்-சல்மான் ஜாவித், மருத்துவ அணி இணைச் செயலாளர்-பேராசிரியர் டாக்டர் ராமசாமி, வர்த்தக அணி இணை செயலாளர்-ராஜன், துணை செயலாளர்களாக மான்மல், மாரியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதே போன்று சேலம், திருப்பூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.