தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்ட பிரசார சுற்றுப்பயண விவரம்

Published On 2024-03-22 09:59 IST   |   Update On 2024-03-22 09:59:00 IST
  • ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.
  • 15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

அந்தவகையில் வருகிற 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான அவரது முதற்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக தேர்தல் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன் விவரம் வருமாறு:-

அரக்கோணம், கிருஷ்ணகிரி

ஏப்ரல் 1-ந்தேதி மாலை 4 மணிக்கு அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட சோளிங்கரில் (பாண்டியநல்லூர்) நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு வேலூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா கந்தனேரி கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

2-ந்தேதி மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட கார்னேஷன் திடல் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு வள்ளலார் மைதானம் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். 3-ந்தேதி மாலை 4 மணிக்கு கரூர் தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாமக்கல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.

நீலகிரி, கள்ளக்குறிச்சி

4-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீலகிரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி ஏ.டி.சி. பஸ் நிலையம் மார்க்கெட் அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 4 மணிக்கு காரமடை மேட்டுப்பாளையம் ரோடு காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு கோவை தொகுதிக்கு உட்பட்ட கொடிசியா மைதானம் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

5-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் ராணிப்பேட்டை எம்.ஜி.ஆர். திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 5.30 மணி தியாகதுருகம் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசிகிறார். இரவு 7.30 மணிக்கு விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

தேனி, பொள்ளாச்சி

6-ந்தேதி மாலை 4 மணிக்கு தஞ்சை தொகுதிக்குட்பட்ட திலகர் திடர் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு நாகை (தனி) தொகுதிக்கு உட்பட்ட அவுரி திடல் பொதுக்கூட்டத்திலும், 7-ந்தேதி மாலை 4 மணிக்கு திருவள்ளூர் (தனி) தொகுதியிலும், இரவு 7 மணிக்கு வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பெரவலூர் சந்திப்பு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

8-ந்தேதி மாலை 4 மணிக்கு சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு மதுரை தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

9-ந்தேதி மாலை 4 மணிக்கு தேனி தொகுதிக்குட்பட்ட பங்களாமேடு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திண்டுக்கல் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

10-ந்தேதி மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட திருவள்ளுவர் திடல், இரவு 7 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட பாண்டியன் நகர் அம்மா திடல் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

மத்திய சென்னை, தென்சென்னை

11-ந்தேதி ஆரணி தொகுதிக்குட்பட்ட சேவூர் பைபாஸ் ராஜ்பிரியா திருமண மண்டபம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட அண்ணாசிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

12-ந்தேதி மாலை 4 மணிக்கு நாமக்கல் தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு பரமத்தி வேலூர் ரோடு அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு சேலம் தொகுதிக்குட்பட்ட கோட்டை மைதானம் பொதுக்கூட்டத்திலும்,

13-ந்தேதி மாலை 4 மணிக்கு திருப்பூர் தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு ஈரோடு தொகுதிக்குட்பட்ட கனிராவுத்தர்குளம் பொதுக்கூட்டத்திலும்,

14-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் (தனி) தொகுதிக்குட்பட்ட அரியலூர் காமராஜர் திடல் பொதுக்கூட்டத்திலும், மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் துறையூர் சாலை மற்றும் இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும்,

15-ந்தேதி மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் தானாதெரு பொதுக்கூட்டத்திலும், இரவு 7 மணிக்கு தென்சென்னை தொகுதிக்குட்பட்ட சின்னமலை வேளச்சேரி சாலை பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

Tags:    

Similar News