தமிழ்நாடு

குடிநீர் பாட்டில், கேன்களில் விற்கும் தண்ணீரில் கனிம சத்து குறைவு...

Published On 2024-03-20 06:26 GMT   |   Update On 2024-03-20 06:26 GMT
  • பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர்.
  • ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது.

சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி. ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் குறைந்தபட்ச கால்சியம், மெக்னீசியம், குளோரைடு, புளோரைடு மற்றும் சோடியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய இந்திய தர நிலைகள் நிறுவனத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

பிரபலமான 30 நிறுவனங்களின் குடிநீர் தயாரிப்புகளை ஆய்வு செய்தனர். நிலத்தடி நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனங்களின் தண்ணீரில் மொத்த கரைந்த உப்புகளின் மதிப்பை குறைக்கிறது. 2000 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட உப்பு அளவை 56 மில்லி கிராம் வரை மட்டுமே பயன்படுத்துகிறது என்று வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். தற்போது விற்பனையில் உள்ள பிரபலமான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் கனிம சத்துக்கள் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 188 மில்லி கிராம் அளவிற்கு கால்சியம் இருக்கலாம் என இந்திய உணவு தரநிலை வலியுறுத்திய நிலையில் இந்த நிறுவனங்கள் 3.5 மில்லி கிராம் மட்டுமே சேர்க்கிறது.

உணவு உட்கொள்வதில் இருந்து பல தாதுக்கள் பெறப்படலாம். அவற்றில் சில புளோரைடுகள் தண்ணீரில் மட்டுமே உள்ளன. குறைந்த புளோரைடு எடுத்துக்கொண்டால் பல் சிதைவை ஏற்படுத்தும். அதிக புளோரைடு உட்கொண்டால் பற்களில் நிறமாற்றம் மற்றும் எலும்பு பலவீனம் ஏற்படலாம் என்று ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியின் பேராசிரியர் சுதர்ஷினி கூறினார்.

ஒரு மனிதனுக்கு 0.6 மில்லிகிராம் புளோரைடு தேவைப்படுகிறது. தரநிலை நிர்ணயம் வரம்பு 1.5 மில்லி கிராம் ஆகும். பரிசோதிக்கப்பட்ட குடிநீரில் 0.08 மில்லி கிராம் அளவே இருந்துள்ளது.

உணவு இல்லாமல் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் ஒருவர் 7 நாட்கள் உயிர் வாழ முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் பாட்டிலில் அடைக்கப்பட குடிநீரை மட்டுமே குடித்தால் நீண்ட காலம் வாழ மாட்டார்கள் என்று சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இளங்கோ கூறினார்.

Tags:    

Similar News