தமிழ்நாடு

தி.மு.க. எம்.பி.க்கள் வரும் 8-ந்தேதி கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Published On 2024-02-03 07:32 GMT   |   Update On 2024-02-03 07:32 GMT
  • வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.
  • பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

சென்னை:

தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

* வரும் 8-ந்தேதி பாராளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவர்.

* தமிழகத்தின் மீதான பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையை கண்டித்தும், இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

* பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சி எம்.பி.க்களும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News