தமிழ்நாடு

தி.மு.க. ஆட்சியில் 286 கோவில்களை புனரமைக்க உபயதாரர்கள் ரூ.600 கோடி உதவி- பி.கே.சேகர்பாபு தகவல்

Published On 2023-10-10 07:10 GMT   |   Update On 2023-10-10 08:00 GMT
  • உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழக சட்டசபையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் இன்று கேள்வி நேரத்தின் போது புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த ஆவன செய்யுமாறு கூறினார்.

இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 286 கோவில்கள் உபயதாரர்கள் மூலம் புனரமைக்கப்பட்டது.

இதற்காக உபயதாரர்கள் ரூ.600 கோடி உதவி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று பெறப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News