தமிழ்நாடு

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு குறித்து டிஜிபி அறிக்கை

Published On 2023-11-10 14:57 GMT   |   Update On 2023-11-10 14:57 GMT
  • தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை விடுத்துள்ளார்.

பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகள் மற்றும் இசிஆர் சாலைகளில் போக்குவரத்தை சரி செய்ய 300 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் 1100 காவலர்கள் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 1800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயிலில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை முன்னிட்டு 700 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News