தமிழ்நாடு

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Published On 2023-11-21 01:53 GMT   |   Update On 2023-11-21 01:53 GMT
  • சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை
  • மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குமரி கடலோர மற்றும் அதன் தென்கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Tags:    

Similar News