தமிழ்நாடு

மக்களவை தேர்தல் நாளன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2024-04-13 05:16 GMT   |   Update On 2024-04-13 05:16 GMT
  • பொது விடுமுறை குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கும் விடுமுறை.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிம்னறத்திற்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மக்களவை தேர்தல் 2024 மற்றும் 233ல் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற விலவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 2024, ஏப்ரல் 19ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆகியவற்றுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags:    

Similar News